விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மழைநீர் வரத்துக் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 3000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் நிலத்தடி நீராதாரமாக பெரிய கண்மாயும், கட்டப்பு ஊருணியும் உள்ளன. இதில் அப்துல் கலாம் தெரு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சேகரமாகும் மழைநீர் செல்ல சுமார் 6 அடி அகல மழைநீர் வரத்துக்கால்வாய் உள்ளது.
இந்தக் கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பெரியகண்
மாய்க்கும், கட்டப்பு ஊருணிக்கும் நீர் செல்வது தடைப்பட்டுள்ளது.
இக்கால்வாயை சீர் செய்து விட்டால் மழைக்காலத்தில் எளிதில் கண்மாய்களில் சேர வழிகிடைக்கும். எனவே கால்வாயை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


