சிவகாசி அருகே குப்பையில் கிடந்த பட்டாசு வெடித்து பள்ளி மாணவர்கள் இருவர் காயம்
சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை குப்பையில் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளுக்கு தீ வைத்த போது அதுவெடித்து பள்ளி மாணவர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.


சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை குப்பையில் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளுக்கு தீ வைத்த போது அதுவெடித்து பள்ளி மாணவர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சங்கர் மகன் அருண்குமார் (15). செல்வம் மகன் பிரதீபன் (14). இவர்கள் இருவரும் முறையே பத்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் மீனம்பட்டி-நாரணாபுரம் சாலையில் உள்ள ஒரு ஓடையில் கொட்டப்படிருந்த பட்டாசு கழிவில் விளையாட்டாக தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
அப்போது அதில் இருந்த பட்டாசு வெடித்து சிதறியதில் இருவரது உடையிலும் பட்டு தீ பிடித்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...