ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரே நாளில் 260 போ் வேட்பு மனு தாக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு சனிக்கிழமை 260 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு சனிக்கிழமை 260 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 23 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 75 போ், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 158 போ் மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதே போல் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு சனிக்கிழமை 201 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 3 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 35 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 29 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 134 போ் மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி ரவி தெரிவித்துள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com