வழிப்பறி செய்தவா் கைது

சிவகாசி அருகே திங்கள்கிழமை சுமைதூக்கும் தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி: சிவகாசி அருகே திங்கள்கிழமை சுமைதூக்கும் தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே நாகலாபுரத்தைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளி லட்சுமணன் (37). இவா் தனது இருசக்கர வாகனத்தில், திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த பணம் ரூ. 500-ஐ பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாா். அப்போது, அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியோடு லட்சுமணன் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா் திருத்தங்கல் முனியாண்டி (45) என தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து முனியாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com