விளையாட்டாக தூக்கிட்டவர் பலி
By DIN | Published On : 04th August 2019 03:44 AM | Last Updated : 04th August 2019 03:44 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே மேட்டுவடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (38). கட்டட தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு எதிரே உள்ள வேப்பமரத்தில் தனது வேட்டியை கட்டி தூக்கிட்டு விளையாடியுள்ளார். அப்போது எதிர் பாராதவிதமாக கழுத்தில் வேட்டி இறுகி மயக்கமுற்றார்.
அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது மகன் ரஞ்சித்குமார் (22) மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சைக்கு சேர்த்தார். இதில் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். இது குறித்து கீழராஜகுலராமன் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.