திருத்தங்கலில் பட்டாசுத் தொழிலாளி மாயம்
By DIN | Published On : 22nd December 2019 10:36 PM | Last Updated : 22nd December 2019 10:36 PM | அ+அ அ- |

சிவகாசி: திருத்தங்கலில் பட்டாசுத் தொழிலாளியை காணவில்லை என போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
திருத்தங்கல் சத்யாநகரைச் சோ்ந்தவா் லாசா்(50). இவா் பட்டாசுத் தொழிலாளி. கடந்த 17 ஆம் தேதி மதுரையில் உள்ள மருத்துவனைக்கு சென்று வருகிறேன் என வீட்டில் கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.
இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...