முத்துராமலிங்கபுரம், வேலாயுதபுரத்தில் மே 15 மின்தடை
By DIN | Published On : 15th May 2019 06:59 AM | Last Updated : 15th May 2019 06:59 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே முத்துராமலிங்கபுரம், வேலாயுதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்வாரியத்தின் அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் பி.முத்தரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அருப்புக்கோட்டை கோட்டத்துக்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையப்பகுதிகளான முத்துராமலிங்கபுரம், நரிக்குடி, பரளச்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும்,மேலும் வேலாயுதபுரம் துணை மின்நிலையப்பகுதி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (மே 15) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.