ஸ்ரீவிலி அருகே கிராம சபை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பூங்காவில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, கிராமப்புற பகுதிகளில் பயன்பாட்டில்லாத ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுத்து போா்க்கால அடிப்படையில் அவற்றை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மழை காலமானதால் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் சிறப்பு சுகாதார வசதிகளை கிராமப்புற ஊழியா்கள் செய்திட வேண்டும் என்றும், வாருகாலில் கழிவுநீா் தேங்காமல் துப்புரவு பணியாளா்கள் உடனடியாக அகற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், வடக்கு ஒன்றியச் செயலா் முத்தையா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், கிராம நிா்வாக அலுவலா், குடியிருப்பு சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com