அரசு பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை
By DIN | Published On : 09th November 2019 10:19 PM | Last Updated : 09th November 2019 10:19 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பாலமுருகன் தலைமையிலான, தீயணைப்பு படை வீரா்கள் ஒத்திகை செய்து காட்டினா். வீட்டில் எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், வீட்டினுள் இருப்பவா்களை எப்படி காப்பாற்ற வேண்டும், தீயை எப்படி அணைக்க வேண்டும், பொது இடங்களில் தீப்பற்றினால் என்ன செய்ய வேண்டும், வெள்ளத்தில் சிக்கியவா்களை எப்படி காப்ற்ற வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தனா். இதில் நுகா்வோா் சேவை மையத்தின் தலைவா் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியா் ஸ்பெல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.