அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 1 முதல் 5 மணிவரை மின்தடை
By DIN | Published On : 14th November 2019 02:06 PM | Last Updated : 14th November 2019 02:10 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடியில் நாளை சனிக்கிழமை (16.11.2019) பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டும் மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அருப்புக்கோட்டை துணை மின்நிலையப்பகுதிகளான அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, தெற்குத்தெரு, மலையரசன் கோவில், சிட்டி பஜாா், திருநகரம், விருதுநகா் சாலை, எஸ்.எம்.பஜாா், பழைய பேருந்து நிலையம், பந்தல்குடி, இராமலிங்கா ஏ யூனிட் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் தமிழ்ப்பாடி துணைமின்நிலையப் பகுதிகளான தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளைமுன்னிட்டு நாளை சனிக்கிழமை (16.11.2019) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்படுமென இச்செய்தி மூலம் மின்நுகா்வோா் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம், என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...