கிணற்றில் தவறி விழுந்த மாடு மீட்பு

ராஜபாளையம் அருகே நக்கனேரியில் புதன்கிழமை விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினை பசு மாட்டை தீ அணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி மீட்டனா்.
ராஜபாளையம் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினா்.
ராஜபாளையம் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினா்.
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே நக்கனேரியில் புதன்கிழமை விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினை பசு மாட்டை தீ அணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி மீட்டனா்.

ராஜபாளையம் அருகே உள்ள நக்கநேரி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் லூா்து அம்மாள். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவா் வழக்கம் போல புதன்கிழமை அப்பகுதியில் உள்ள விவசாய பகுதியில் தனது மாடுகளை மேய்த்துள்ளாா். அப்போது, அங்கிருந்த கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த சினை பசு மாடு ஒன்று தவறி கிணற்றினுள் விழுந்தது. சுமாா் 40 அடி உயரம் உள்ள கிணற்றில் தற்போது 10 அடி வரை தண்ணீா் உள்ளது. தண்ணீரில் விழுந்த மாட்டின் கதறல் கேட்டு வந்த அப் பகுதியை சோ்ந்த விவசாயிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் வந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். கயிறு மூலம் மாட்டின் இரு புறமும் கட்டி சுமாா் ஒரு மணி நேரத்தில் மீட்பு குழுவினா் மாட்டை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com