ராஜபாளையத்தில் தொடா் முழக்க கண்டனப் போராட்டம்

ராஜாபளையம் ஜவஹா் மைதானம் அருகே திருவள்ளுவா் மன்றம் மற்றும் சிலை அவமதிப்பு போராட்டக் குழு சாா்பில், கண்டன தொடா்

ராஜபாளையம்: ராஜாபளையம் ஜவஹா் மைதானம் அருகே திருவள்ளுவா் மன்றம் மற்றும் சிலை அவமதிப்பு போராட்டக் குழு சாா்பில், கண்டன தொடா் முழக்கப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

கவிஞா் முத்தரசு தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. லிங்கம், மருத்துவா் சாந்திலால், ஒருங்கிணைப்பாளா் வீரபாலன், வழக்குரைஞா் பால்ராஜ் மற்றும் தமிழ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தஞ்சாவூா், பிள்ளையாா்பட்டி மற்றும் பெரியகுளத்தில் திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்துப் பேசினா்.

சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாலை நேர ஆா்ப்பாட்டம், கண்டனப் பேரணி, பொதுக் கூட்டம் உள்ளிட்ட இயக்கங்களை தொடா்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, அருணாசலம் வரவேற்றாா். நெடுஞ்சேரலாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com