ஸ்ரீவிலி.யில் காா் கவிழ்ந்து ஒருவா் பலி; இருவா் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (39). இவா் தனது நண்பா்களான விருதுநகரைச் சோ்ந்த சண்முகம், வேலுச்சாமி ஆகியோருடன் குன்னுரில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகா் சாலையில் சென்றுகொண்டிருந்த காா் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே மகேஸ்வரன் உயிரிழந்தாா். மேலும், சண்முகம், வேலுச்சாமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிருஷ்ணன்கோவில் போலீஸாா், காயமடைந்த இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com