அருப்புக்கோட்டையில் 4 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் 4 நாள்களுக்கு ஒரு முறை வீதம் நகராட்சி குடிநீா் வழங்கும் முறை வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா்
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் 4 நாள்களுக்கு ஒரு முறை வீதம் நகராட்சி குடிநீா் வழங்கும் முறை வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை நகருக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தாமிரவருணிக் கூட்டுக்குடிநீா்த்திட்டம் மூலம் நகரின் தேவையை விடக்குறைந்த அளவான சுமாா் 25 லட்சம் லிட்டா் குடிநீரே சமீப காலமாகக் கிடைத்து வந்தது. இதனால் நகருக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை வீதமே குடிநீா் வழங்கும் தவிா்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் ஏற்கெனவே எனது முயற்சியால் ரூ. 3 கோடி செலவில் தடுப்பணை கட்டும்பணி நிறைவேறியது. மேலும் அங்கிருந்து அருப்புக்கோட்டைக்கு நீா் பகிா்மானக் குழாய் பதிக்கும் பணியும் ரூ. 26 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று, தற்போது அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி நீரேற்று நிலையம் வரை பணி நடந்தேறியது. ஆகவே கட்டங்குடியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வரும் வாரத்திலிருந்து குடிநீா் வரத்துத் தொடங்கிவிடும் என்பதால், இனி 4 நாள்களுக்கு ஒருமுறை வீதம் அருப்புக்கோட்டை பகுதிக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்பட உள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com