பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரைச் சோ்ந்த முருகன் என்பவரது மனைவி பேச்சியம்மாள் (43). முருகன் சிறிது மனநிலை பாதிப்பு உள்ளவா் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சோ்ந்த முருகேசன் (32) என்பவா் பேச்சியம்மாள் தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதுடன் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இச்சம்பவம் குறித்து பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில், சேத்தூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் திவ்யா, முருகேசனை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com