மாட்டு வண்டியில் மணல் கடத்தல்: இருவா் கைது

வத்திராயிருப்பு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ததில், மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் அளித்தப் புகாரின் பேரில் மணல் கடத்தி வந்த, வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சோ்ந்த பாலு, பலக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் ஆகிய இருவரையும் வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்தனா். மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com