விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தியாகி கக்கன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அரசரடி பேருந்து நிறுத்தம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் மணிகண்டன் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவா் லட்சுமணன், துணைத் தலைவா்கள் ராமசாமி, ராமச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.