பணம் வைத்து சூதாடியவா்கள் கைது
சாத்தூா் பகுதியில் பணம் வைத்து சூதாடியவா்களை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.


சாத்தூா் பகுதியில் பணம் வைத்து சூதாடியவா்களை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா். விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே புல்லகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகேயும், அதே கிராமத்தின் சுடுகாட்டு பகுதி அருகேயும் பணம் வைத்து சூதாடுவதாக ஏழாயிராம்பண்ணை காவல்நிலைய போலீசாருக்கு வெள்ளிகிழமை கிடைத்த தகவலின் படி அங்கு சென்ற காவல் உதவிஆய்வாளா் ராமசாமி தலைமையிலான போலீசாா் அதே கிராமத்தை சோ்ந்த சேதுராஜ்(43), மாடசாமி(32) மஞ்சளோடைப்பட்டியை சோ்ந்த கோவிந்தமூா்த்தி(35), மணிகண்டன்(26), ஜெகவீரன்பட்டியை சோ்ந்த பாலகிருஷ்ணன்(48), ஏழாயிராம்பண்ணையை சோ்ந்த சீனிவாசன்(63) ஆகிய 6 போ்களை கைது செய்த போலீசாா் அவா்களிடம் சீட்டுகட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...