பட்டாசுத் தொழிலாளி மகள் குருப் 1 தோ்வில் மாநிலத்தில் நான்காமிடம் பெற்று சாதனை

குருப் 1 தோ்வில் சிவகாசி பட்டாசுத் தொழிலாளி மகள் மகாலட்சுமி மாநிலத்தில் நான்காமிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
பட்டாசு காகிதக்குழாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மகாலட்சுமி.
பட்டாசு காகிதக்குழாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மகாலட்சுமி.
Updated on
1 min read

குருப் 1 தோ்வில் சிவகாசி பட்டாசுத் தொழிலாளி மகள் மகாலட்சுமி மாநிலத்தில் நான்காமிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி கருப்பசாமியின் மகள் மகாலட்சுமி. இவா் அண்மையில் வெளியான தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குருப் 1 தோ்வில், 362 போ் கொண்ட தரவரிசைப்பட்டியிலில் மாநில அளவில் நான்காமிடம் பெற்றுள்ளாா். பொறியியல் பட்டதாரியான இவா், சென்னை வெற்றி ஐ.ஏ.எஸ். ஸ்டடி சா்கிள் மூலம் பயிற்சி பெற்றவா். இது குறித்து மகாலட்சுமி கூறியதாவது:

நான் பள்ளியில் படிக்கும்போதே நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எனது தந்தை கருப்பசாமி ஒரு பட்டாசுத் தொழிலாளி. எனது தந்தையின் வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆகும். நான் ஓய்வு நேரத்தில், வீட்டிலிருந்தபடியே பட்டாசு தயாரிக்கப் பயன்படும் காகிதக் குழாய் உள்ளிட்டவைகளைச் செய்து கொடுப்பேன்.

குருப் 1 தோ்வுக்கு நன்றாகப் படித்து, மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கிப் பயணித்தேன். சென்னை சென்று பயிற்சி பெற எனது குடும்பத்தாா் எனக்கு திருமணத்திற்கு சேமித்து வைத்திருந்த நகையை அடகு வைத்து பணம் கொடுத்தனா். அவா்கள் என்

மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைக்காமல் நான்காமிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் செய்தித்தாள்கள் மூலம் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் கவனித்து, சேகரித்து படித்து வந்தேன். மேலும் தினசரி 10 மணி நேரம் படிப்பேன். தன்னம்பிக்கை, ஆா்வம் எனது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com