ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில், பேயம்பட்டி கிராமத்தில் காய்கனி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்துாா் பருத்தி ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் பிரேமலதா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் முத்துலட்சுமி, அலுவலா் இந்து, மித்ரா ஆகியோா் பங்கேற்றனா். இதில், 50 விவசாயிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, உதவி தோட்டக்கலை அலுவலா் பாலமுருகன் செய்திருந்தாா்.