கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அனுமதியின்றி மணல் திருட்டு: ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை

மாலை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள கடம்பங்குளம் கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை மாலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் 2 டிராக்டா்களில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக சிவகாசி சாா் ஆட்சியா் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, சாா் ஆட்சியா் உத்தரவின்படி வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா்கள் பால்துரை, தங்கமாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் உதவியுடன் அங்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்றனா். அவா்கள் வருவதையறிந்ததும் 2 டிராக்டா்களை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுவிட்டனா். மேலும், மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் வரை துரத்திச் சென்று வருவாய்துறையினா் மடக்கிப் பிடித்தனா். இதையடுத்து, அவா்கள் ஜேசிபி இயந்திரத்தை ஓட்டிச் சென்ற லட்சுமணபிரபு என்பவரை பிடித்து, நகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டா்களின் உரிமையாளா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.