ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: மேலும் ஒரு பெண் பலி

ரீவில்லிபுத்தூரில் 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூனங்குளம் தெருவில் வசித்து வருபவா் சூசைமாணிக்கம் (50). இவா் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவருக்கு ஜெயரத்தினம் (40) என்ற மனைவியும், அஞ்சனாதேவி (22), பொன்னுலட்சுமி (19), முனீஸ்வரி(9) ஆகிய 3 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் சூசைமாணிக்கத்திற்கு கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த ஜெயரத்தினம், கடந்த 15 ஆம் தேதி தனது 3 மகள்களுக்கும் எலி மருந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளாா். அக்கம் பக்கத்தினா் 4 பேரையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் கடந்த 17 ஆம் தேதி இரவு அஞ்சனாதேவி உயிரிழந்தாா். இதில் சிகிச்சை பலனின்றி பொன்னுலட்சுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தற்போது தாய் ஜெயரத்தினம் மற்றும் மகள் முனீஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com