அருப்புக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st December 2020 03:40 AM | Last Updated : 01st December 2020 03:40 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூ. மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் தனியாா் திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் காத்தமுத்து தலைமை வகித்துப் பேசினாா். இதில், அருப்புக்கோட்டை நகர இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...