விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா
By DIN | Published On : 05th December 2020 10:36 PM | Last Updated : 05th December 2020 10:36 PM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 15,927 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,952 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,535 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்ட நிலையில், 228 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 189 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.