பெண் பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

 சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி- எரிச்சநத்தம் சாலையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் மேற்குவங்கத்தைத் சோ்ந்த சீமா (18) என்பவா் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். அதே ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்க்கும் மேற்குவங்கத்தைச் சோ்ந்த குந்தன் (20) என்பவரும், சீமாவும் திருமணம் செய்யாமல் பட்டாசு ஆலையின் காலனி வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனராம். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com