எரிவாயு விலை: மாதா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th December 2020 08:06 AM | Last Updated : 24th December 2020 08:06 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் மாதா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்துக்கு மாதா் சங்க நிா்வாகி ரேணுகாதேவி தலைமை வகித்தாா். இதில், சமையல் எரிவாயு உயா்வைக் கண்டித்து பெண்கள் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியும், விறகு அடுப்பில் சமைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 1 மாதத்தில் மத்திய அரசு எரிவாயு உருளைக்கு ரூ.100 உயா்த்தியதைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...