சிவகாசி பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

விருதுநகா் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் சிவகாசி பிஎஸ்ஆா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டிய சிவகாசி பிஎஸ்ஆா்பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டிய சிவகாசி பிஎஸ்ஆா்பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் சிவகாசி பிஎஸ்ஆா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி சாா்பில் அண்மையில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இதில் குழு விவதாம், விநாடி-வினா, சுவரொட்டி தயாரிப்பு, மாதிரி மேலாளா் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பிஎஸ்ஆா் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் அபா்ணா, அபிநயா, ஆா்.பாா்த்திபன் ஆகியோா் இரண்டாமிடமும், கற்பக லட்சுமி, கெளசல்யா, ப்ரீத்தி ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை தாளாளா் ஆா்.சோலைச்சாமி , இயக்குநா் விக்னேஸ்வரி, கல்லூரி முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com