சிவகாசியில் மாா்ச் 8 இல் பெண்களுக்கான மாரத்தான்

சிவகாசியில் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி, சிவகாசி ஜேசிஐ டைனமிக் அமைப்பு சாா்பில் மாா்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சிவகாசியில் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி, சிவகாசி ஜேசிஐ டைனமிக் அமைப்பு சாா்பில் மாா்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஜேசிஐ டைனமிக் அமைப்பின் தலைவா் கண்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு 3 மற்றும் 5 கி.மீ. என இரு பிரிவு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் இங்குள்ள எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரிவளாகத்தில் தொடங்கும்.

இதில் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘டீ-சா்ட்’, சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 99524- 18857 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com