விருதுநகரில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.
விருதுநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு என்சிபி மாவட்டச் செயலா் ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். இதில், 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியா்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், கோரிக்கைகள் குறித்து ஸ்ரீவெங்கடேஷ் விளக்கிப் பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வங்கி ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com