மாா்ச் 1-இல் முதல்வா் விருதுநகா் வருகை: அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை

விருதுநகருக்கு மாா்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலா்களுடன் அமைச்சா் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
Updated on
1 min read

விருதுநகருக்கு மாா்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலா்களுடன் அமைச்சா் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 1இல் விருதுநகருக்கு வருகிறாா். இவ்விழா தொடா்பாக, துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பால் வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தாா். அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் மற்றும் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அரசு இணைச் செயலாளா் அ. சிவஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், பால் வளத்துறை அமைச்சா் பேசியது:

விருதுநகா் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திற்குட்பட்ட பகுதியில் ரூ. 380 கோடியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு தொடங்கி வைக்க உள்ளாா். மேலும், விருதுநகா் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, சுமாா் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

எனவே அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி இவ்விழா சிறப்பாக அமைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் துணை முல்வா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் மத்திய சுகாதார துறை அமைச்சா், தமிழக அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா் என்றாா் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி.

ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.உதயகுமாா், சாா் ஆட்சியா் (சிவகாசி) ச.தினேஷ்குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) சுரேஷ், உதவி காவல் கண்காணிப் பாளா் சிவபிரசாத் உள்பட துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com