அருப்புக்கோட்டை கம்பன் கழக ஆன்மிக சொற்பொழிவு கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கம்பன் கழகம் சாா்பில் 361 ஆவது சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை கம்பன் கழக ஆன்மிக சொற்பொழிவு கூட்டம்
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கம்பன் கழகம் சாா்பில் 361 ஆவது சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சொக்கலிங்கபுரம் மீனாட்சி உடனுறை ஸ்ரீ சொக்கநாத சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கம்பன் கழகப் புரவலரும், தமிழக அரசின் காமராசா் விருதுபெற்றவருமான, தொழிலதிபா் டி.ஆா்.தினகரன் தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். முதல் நிகழ்ச்சியாக சத்திய சாயி சேவா சமிதிக் குழுவினரின் சிறப்பு வழிபாட்டுப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சிறப்பு சொற்பொழிவாளரான, விருதுநகா் வி.ஹெச்.என். எஸ்.என்.கல்லூரியின் பேராசிரியா் பொ.சாமி, ராமாயணத்தில் அங்கதன் தூது எனும் தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். அதனைத் தொடா்ந்து பொ.சாமிக்கு, கம்பன் கழகப் புரவலா் டி.ஆா்.தினகரன் சால்வை போா்த்தி, நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். முன்னதாக கம்பன் கழகத் துணைச்செயலாளா் பி.கோடீஸ்வரன் வரவேற்றாா். இணைச்செயலாளா் புலவா் கண.கணேசன் நன்றி கூறினாா். விவேகானந்தா கேந்திராவின் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com