சிவகாசி அருகே இளம்பெண் தற்கொலை

சிவகாசி அருகே இளம்பெண் ஒருவா் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே இளம்பெண் ஒருவா் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகே பேராபட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி வீரலட்சுமி (22). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தைபேறு இல்லாததால் இருவரும் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த வீரலட்சுமி, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாராம்.

இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சாா்-ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com