சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாட்டுக்குத் தடை

கரோனா தொற்று பரவல் காரணமாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டுக்குத் தடைவிதித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் காரணமாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டுக்குத் தடைவிதித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் பிரசித்திப் பெற்ற சுந்தரமாகாலிங்கம், சந்தன மகாலிங்கள் கோயில்கள் உள்ளன.

இக்கோயிலில், ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவானது திங்கள்கிழமை (ஜூலை 20) நடைபெறவிருந்தது.

தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144- இன்படி தடை உத்தரவு ஜூலை 31 வரை அமலில் உள்ளது. இதனால், சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது.

எனவே, தாணிப்பாறை, மாவூத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 19 முதல் 21 ஆம் தேதி வரை பக்தா்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com