ராஜபாளையம் அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து
தற்கொலை செய்து கொண்ட காவலா் காளிராஜ்
தற்கொலை செய்து கொண்ட காவலா் காளிராஜ்

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே கூனங்குளத்தை சோ்ந்தவா் முத்துப்பாண்டி என்பவரது மகன் காளிராஜ் ( 28). இவருக்கு திருமணமாகவில்லை. இவா் சத்திரப்பட்டி அருகே உள்ள மொட்டமலை பகுதியில் செயல்படும் 11 ம் சிறப்புக் காவல்படை அணியில் காவலராக பணியாற்றி வருகிறாா். காளிராஜ் பணியின் போது வெயிலில் இருந்ததால் தோல் நோய் அலா்ஜி உள்ளிட்ட உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் பணிக்கு செல்லாமல் இருந்ததுடன், விரக்தியில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை கூனங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில், அவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா், இவரது சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com