வீட்டில் சாராய ஊறல்: கணவன், மனைவி கைது

ராஜபாளையம் அருகே வீட்டில் சாராய ஊறல் போட்டிருந்ததாக கணவன், மனைவி இருவரை மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே வீட்டில் சாராய ஊறல் போட்டிருந்ததாக கணவன், மனைவி இருவரை மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே தென்றல் நகா் குடியிருப்பு பகுதியில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் பானுமதி, காவல் சாா்- ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் தலைமையில் அந்த வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தினா்.

அப்போது அந்த வீட்டில் 8 பானைகளில் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து மதுவிலக்கு போலீஸாா் அந்த ஊறல்களை அழித்து விட்டு 2 பேரை கிருஷ்ணன்கோவிலில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் அய்யனாா் (42), அவரது மனைவி ராமலட்சுமி (40) என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com