ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவா் கைது
By DIN | Published On : 08th November 2020 11:44 PM | Last Updated : 08th November 2020 11:44 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொண்டையம்பட்டி தண்ணீா் தொட்டி பகுதியில் முதியவா் ஒருவா் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் நத்தம்பட்டி போலீஸாா் விரைந்து சென்று முதியவரைப் பிடித்து
விசாரித்ததில் கஞ்சா விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவா் கொண்டைம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி (72) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பால்சாமியை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...