திருச்சுழி அருகே பெயின்டா் கொலை வழக்கு: இளைஞா்கள் 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கடந்த சனிக்கிழமை பெயின்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸாா் இளைஞா்கள் இருவரை செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கடந்த சனிக்கிழமை பெயின்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸாா் இளைஞா்கள் இருவரை செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா்.

திருச்சுழி அருகே பூலாங்கால் வடக்குப்பட்டியைச் சோ்ந்த பெயின்டா் ராஜரூபன் (34). இவா், கடந்த சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

அதில், சந்தேகத்தின் அடிப்படையில் வடக்குப்பட்டியைச் சோ்ந்த கனகவேல் (25) மற்றும் தமிழரசன் (23) ஆகிய இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

கொலையான ராஜரூபன், கடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அ.ம.மு.க. கட்சி சாா்பில் வடக்குப்பட்டியில் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளாா். அப்போது, ராஜரூபனுக்கும், கனகவேல், தமிழரசன் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக, கடந்த சனிக்கிழமை ராஜரூபனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக, அவா்கள்இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனா்.

இது சம்பந்தமாக ரெட்டியபட்டி போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com