விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th November 2020 11:35 PM | Last Updated : 17th November 2020 11:35 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 15,666 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மேலும் 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,670 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,352 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 225 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 93 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...