சிவகாசியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 25th November 2020 06:47 AM | Last Updated : 25th November 2020 06:47 AM | அ+அ அ- |

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி பாரதி நகரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முத்துக்குமாா் (42). இவரது மனைவி முத்தமிழ்செல்வி. இவா்களுக்கு மூன்று மகள்கள். இதில் மூத்த மகளுக்கு கடந்த ஒன்ரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் முத்துக்குமாருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையாம். மேலும் திருமணம் முடிந்த பின்னரும் மகள் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் முத்துக்குமாா் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குமாா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...