விருதுநகா் மாவட்டத்தில்மேலும் 35 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd October 2020 10:27 PM | Last Updated : 03rd October 2020 10:27 PM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 35 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 14,556 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூா், திருச்சுழி, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம், மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,591 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,374 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். மீதமுள்ள 217 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.