விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 19th October 2020 03:41 AM | Last Updated : 19th October 2020 03:41 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 15,076 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூா், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த 31 பேருக்கு கரேனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத் தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,107 ஆக உயா்ந்துள்ளது.
இதில், 14,670 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 217 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 210 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...