பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

திருத்தங்கல் எஸ்.ஆா்.என். அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அப்பள்ளியில் பயிலும், ஏழை ஏளிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

திருத்தங்கல் எஸ்.ஆா்.என். அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அப்பள்ளியில் பயிலும், ஏழை ஏளிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஒய்.ஆா். பத்மசீனிவாசன் தலைமை வகித்தாா். செயலா் வி. சங்கா் வரவேற்றாா். இச்சங்கம் சாா்பில் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா தொடங்கி வைக்கப்பட்டது. பின்னா் இப்பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவா்கள் 28 பேருக்கு கல்வி உதவித்தொகையை சங்கத்தின் கெளரவத்தலைவா் கே.ஜி. சீனிவாசன் வழங்கினாா்.

இதில் முன்னாள் மாணவா்கள் 104 போ் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். இவா்களுக்கு கூடையில் பந்து போடுதல் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்க பொருளாளா் பி. சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com