ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 21st August 2021 09:28 AM | Last Updated : 21st August 2021 09:28 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கரோனா நோய் தொற்றுப் பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அவசியம் ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டது.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் இருப்புப்பாதை காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சரவணன்முருகன், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கணேசன், தனிப்பிரிவு காவலா் பொன்குமாா், ரயில் நிலைய அதிகாரி ராஜாஉசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த விழிப்புணா்வு முகாம் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் தொடா்ந்து 5 நாள்கள் நடைபெற உள்ளது.