பள்ளி, கல்லூரி பகுதிகளில் புகையிலை விற்ற 21 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்ாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்ாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை மற்றும் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாவட்ட குற்றப்பதிவேடு துணை காவல் கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அதில் கடந்த 2 நாள்களில் 21 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com