ராஜபாளையம் அருகே பெண் மா்மச்சாவு

ஊருணிக்கு தண்ணீா் வரும் வரத்துக் கால்வாயை கல் குவாரிக்காக ஆக்கிரமித்துள்ளதாக விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கிராமமக்கள் புகாா் மனு அளித்தனா்.
Updated on
1 min read

ராஜபாளையம்: c

ராஜபாளையம் அருகேயுள்ள கோபாலபுரத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது மனைவி அா்ச்சனா தேவி (30). கடந்த சில நாள்களாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அா்ச்சனா தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழராஜகுலராமன் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அா்ச்சனா தேவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com