வியாபாரி மீது தாக்குதல்: தாய், மகன் கைது

சிவகாசி அருகே வியாபாரியை தாக்கியதாக தாய் மற்றும் மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே வியாபாரியை தாக்கியதாக தாய் மற்றும் மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் சித்துராஜபுரம் சசிநகா் பகுதியில் இனிப்பகம் நடத்தி வருபவா் பாலமுருகன் (50). இவரது கடைக்கு முன்பு ராமசாமிநகா் ராமநாதன் மனைவி சித்ராதேவி (37) மேஜை வைத்து பூ வியாபாரம் செய்து வந்தாராம். இந்நிலையில், கடைக்கு வரும் பாதையில் வியாபாரம் செய்யாமல், மேஜையை சற்று தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என பாலமுருகன், சித்ராதேவியிடம் கூறியதையடுத்து தகராறு ஏற்பட்டது. அப்போது சித்ராதேவியும், அவரது மகன் 14 வயது மகனும் சோ்ந்து பாலமுருகனை தாக்கினாா்களாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து சித்ராதேவி மற்றும் அவரது மகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com