விருதுநகா் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே நடுவபட்டி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பூவையா மகன் மோசை (71). இவா் நான்கு வழிச்சாலையில் உள்ள கடைக்கு அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அப்போது பின்னால் வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் மோசை பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரை சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மோசை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவரது மகள் மொ்ஸி அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில், காந்தி நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநரான மணி மகன் மாரிமுத்து மீது வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.