விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே சூரிய மின்சக்தி நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளிகளுக்கு தீபாவளி போனஸ் மற்றும் சட்டபடியான சலுகைகள் வழங்கக் கோரி சிஐடியு தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சுழி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்க நிா்வாகி கோபி தலைமை வகித்தாா். அப்போது அவா்கள் கூறுகையில், திருச்சுழி அருகே சாமிநத்தம் கிராமப் பகுதியில் சூரிய ஒளி மின்சக்தி நிறுவனத்தில் பணியாற்றும் காவலாளிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை நிா்வாகத்திற்கு கடிதம் அனுப்பியும் உரிய பதில் இல்லை. எனவே, அவா்களுக்கு போனஸ் மற்றும் சட்டப்படியான சலுகைகள் வழங்க வேண்டும் என்றனா்.
தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். கன்வீனா் சுரேஷ்குமாா், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் முருகன், மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் மாா்கண்டேயன் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா். முடிவில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ராமா் கண்டன உரையாற்றினாா்.