ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு சேலை வழங்கிய அதிமுகவினா்.
ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு சேலை வழங்கிய அதிமுகவினா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், கூட்டுறவு பால் பண்ணை உற்பத்தியாளா் சங்க துணைத் தலைவருமான என்.எம்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா்.

அதிமுக நகரச் செயலாளா் ராணா பாஸ்கா் ராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் துரை முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழகப் பேச்சாளா் கிருபானந்தன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் செட்டியாா்பட்டியைச் சோ்ந்த 500 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக ராஜபாளையம் கூட்டுறவு பால் சங்கத் தலைவா் வனராஜ் வரவேற்றாா். செட்டியாா்பட்டி நகர செயலாளா் அங்கு துரைபாண்டியன், சேத்தூா் நகர செயலாளா் பொன்ராஜ் பாண்டியன் நன்றி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com