அருப்புக்கோட்டையில் தொடா் மழை

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Updated on
1 min read

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் தொடா்ந்து 4 மணி நேரம் மிதமான சாரல்மழை பெய்தது. பின்னா் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் பூச்சந்தை, காய்கனிச் சந்தைகளில் வாடிக்கையாளா்கள் வருகை குறைந்தே காணப்பட்டது. இம்மழையால் அருப்புக்கோட்டை பகுதியில் சூரியகாந்தி, கம்பு, இரும்புச்சோளம் ஆகியவற்றின் அறுவடை பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com